வேல் மாறல்
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளிய ‘ வேல் மாறல் ’ ... வேலும் மயிலும் துணை ... திருத்தணியில் உதித் ( து ) அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என ( து ) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே . ( … இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் … ) ( … பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “ திரு ” என்ற இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் … ) 1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … ) 2. திருத்தணியில் உதித் ( து ) அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என ( து ) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … ) 3. சொலற் ( கு ) அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத் ( து ) எறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … ) 4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் ப...